'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

கடந்த 2021ல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி சீனு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'அகண்டா 2' தயாராகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் போய்பட்டி சீனுவே இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் வெளியானபோது அதன் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே பாலகிருஷ்ணாவின் பேனர் முன்பாக ஆட்டுக்கிடாய் ஒன்றை வெட்டி பலி கொடுத்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'அகண்டா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணா, “தயவுசெய்து ரசிகர்கள் எனது திரைப்பட வெளியீட்டின் போது தியேட்டருக்கு வெளியே நேர்த்திக்கடன் என்கிற பெயரில் இது போன்று உயிர் பலியை மேற்கொள்ள வேண்டாம். கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் இப்படி விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் அவரது பேச்சை பின்பற்றுவார்கள் என நம்புவோம்.