விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

பிரபல நட்சத்திர தம்பதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவன் தம்பதி. சினிமாவில் ஜோடியாக நடித்த காலத்திலேயே இவர்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தார்கள். நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்து மீனாட்சி என்கிற ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். அதேபோல காவ்யா மாதவனும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மிக குறுகிய காலத்திலேயே திருமண பந்தத்தை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் ஏற்கனவே அமுங்கி இருந்த காதல் மீண்டும் துளிர்விட்டு அடுத்த சில மாதங்களிலேயே இருவரும் திடீரென திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை சென்றது. இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. திலீப்-மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியும் இந்த தம்பதியுடன் தான் இப்போது வரை வசித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகர் திலீப் ஒரு நடிகையின் கடத்தல் தொடர்பான வழக்கில் சிக்கி சிறை சென்றது, அப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கும் திலீப் நடிகை மஞ்சு வாரியரை விட்டு பிரிவதற்கும் கூட காரணமாக காவ்யா மாதவன் விமர்சிக்கப்பட்டது, திலீப்பின் படங்கள் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது என ஒரு பக்கம் விமர்சனங்களையும் சரிவுகளையும் திலீப் சந்தித்தாலும் இந்த காதல் ஜோடி எட்டாம் வருட திருமண கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவியா மாதவன் தானும் கணவர் திலீப்பும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.




