கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? |
சமீபத்தில் 2022ம் வருடத்திற்கான 53 வது கேரளா அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த வருடம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் என்கிற கேரள அரசு விருது அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மம்முட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகை பிராச்சி டெஹ்லான் என்பவர் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டில்லியை பூர்வீகமாகக் கொண்ட பிராச்சி டெஹ்லான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவுக்கு வருகை தந்துள்ள பிராச்சி டெஹ்லான் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு ரசிகையாக நான் மாறிய தருணம் இது. கொச்சியில் இருக்கும் நிலையில் மம்முட்டியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால் எப்படி ?. அவருடைய புன்னகை சுற்றிலும் இருப்பவர்களை வீழ்த்தி விடும். நீங்கள் அவரை பிரமித்து பார்ப்பீர்கள். நான் மம்முக்காவிடம் ஒரு ஹக் கேட்டேன்.. கேட்டது எனக்கு கிடைத்தது” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.