பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியவர். கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய நேர் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். பிரபல தயாரிப்பு நிறுவனமான e4 தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நேர் திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அந்த படத்தில் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனரான சாந்தி மாயாதேவி தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தி உள்ளது.




