மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் கருத்து | மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றும் ரகுமானின் மகள் | பைக் பயணங்களை விடாமல் தொடரும் மஞ்சு வாரியர் | பிறந்தநாள் வாழ்த்துடன் காதலியை அறிமுகப்படுத்திய சுரேஷ்கோபியின் இளைய மகன் | காளிதாஸ் இரண்டாம் பாகம் துவங்குகிறது | சமந்தாவின் கருத்தை விமர்சித்த கிராமி விருது இசையமைப்பாளர் | 'சிறகடிக்க ஆசை' குழுவினருடன் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா! | மலராக என்ட்ரி கொடுத்த அஸ்வதிக்கு ரசிகர்கள் வரவேற்பு! | அந்த நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன் - வீஜே தீபிகா | நடிகையுடன் தொடர்பு, கொலை மிரட்டல்: தெலுங்கு நடிகர் மீது மனைவி புகார் |
மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை ஏற்படுத்தியவர். கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய நேர் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். பிரபல தயாரிப்பு நிறுவனமான e4 தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நேர் திரைப்படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அந்த படத்தில் வழக்கறிஞராக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனரான சாந்தி மாயாதேவி தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார். சமீபத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்னும் குஷிப்படுத்தி உள்ளது.