உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

மலையாள திரையுலகில் சமீப நாட்களாக நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் அவரை வைத்து ‛வழக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ள சனல்குமார் சசிதரன் ஆகியோருக்கு இடையே இந்த படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்தாலும் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டதால் தனது இமேஜ் பாதிக்கும் என்று இந்த படத்தை வெளியிட டொவினோ தாமஸ் மறுக்கிறார் என்று சணல்குமார் சசிதரன் குற்றம் சாட்டினார். ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் இந்த படத்திற்கு நட்டம் வரும் என்றும் அதே சமயம் இயக்குனர் மீது உள்ள கெட்ட பெயரால் ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுக்கின்றன என்று விளக்கம் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.
இந்த நிலையில் டொவினோ தாமஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார் என்கிற ஆத்திரத்தில், “ஒரு படம் என்பது பூட்டி வைப்பதற்காக அல்ல.. ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காகத்தான்..” என்று கூறி இதன் பிரிவியூ காபி லிங்க்கை தனது பேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளரின் அனுமதி இன்றி சமீபத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இயக்குனர் சணல்குமார். இவரது செயல் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காப்பிரைட் சட்டத்தின்படி அவரது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த படத்தின் பிரிவியூ காப்பி நீக்கப்பட்டது. மேலும் வழக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் அனுமதி இன்றி இயக்குனர் இப்படி படத்தின் பிரிவியூ காப்பியை பொதுவெளியில் வெளியிட்டது குறித்து அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.