நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கடந்த 2022ல் மம்முட்டி, பார்வதி நடிப்பில் வெளியான படம் 'புழு'. ரதீனா என்கிற பெண் அறிமுக இயக்குனர் இயக்கிய இந்த படத்தில் மம்முட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி. தங்களது ஜாதியை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் வெகுகாலமாக அவரை ஒதுக்கி வைத்திருக்கும் மம்முட்டி, ஒரு கட்டத்தில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரையும் அவரது கணவரையும் கவுரவ கொலை செய்வதுதான் படத்தின் கதை. பொதுவாகவே சில சமூகங்களில் ஆணவக் கொலை நடக்கிறது என்பதால் இந்த படம் வெளியான சமயத்தில் எந்தவித பிரச்னையும் கிளம்பவில்லை.
படம் வெளியாகி தற்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் படத்தின் இயக்குனர் ரதீனாவின் கணவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தற்போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அந்த பேட்டியில் அவர் படம் பற்றி கூறும்போது, இது பிராமண சமுதாயத்தை எதிர்ப்பதற்காக எழுதப்பட்ட கதை என்று கூறியதுடன், அதில் மம்முட்டியின் நடிப்பையும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் வலதுசாரி அமைப்புகளும் மம்முட்டியை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதே சமயம் கேரளாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மாநில அமைச்சர்கள் பலரும் மம்முட்டிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக மலையாள சினிமாவின் அடையாளமாக, மலையாள சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல காரணமாக இருந்த மம்முட்டியை இதுபோன்று ஜாதி, மத சர்சைக்குள் கொண்டுவரக் கூடாது என்றும் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மம்முட்டி நடித்துள்ள டர்போ திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த படத்திற்கான விளம்பரமாகவே அமையும்.