அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெலுங்கில் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சிவரஞ்சனி தொண்ணூறுகளின் துவக்கத்தில் சின்ன மாப்ளே, காத்திருக்க நேரமில்லை, தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர். தற்போது தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சமீபத்தில் துவங்கிய விருஷபா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிவரஞ்சனி சென்டிமென்டாக படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.