300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெலுங்கில் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சிவரஞ்சனி தொண்ணூறுகளின் துவக்கத்தில் சின்ன மாப்ளே, காத்திருக்க நேரமில்லை, தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர். தற்போது தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சமீபத்தில் துவங்கிய விருஷபா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிவரஞ்சனி சென்டிமென்டாக படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.