ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

சோனி லிவ் ஓடிடி நிறுவனம் மற்றும் எம்மி எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் வெப் தொடர் 'ப்ரீடம் அட் மிட்நைட்'. இந்த தொடர் இந்தியா சுதந்திரம் அடைந்த கடைசி காலகட்டத்தில் நடப்பது மாதியான கதையை கொண்டது. இதில் சரோஜினி நாயுடுவாக பாலிவுட் குணசித்ர நடிகை மலிஷ்கா மென்டோன்சா நடிக்கிறார்.
அவரோடு லியாகத் அலிகானாக ராஜேஷ் குமாரும், வி.பி.மேனனாக கே.சி.சங்கரும் நடிக்கின்றனர். சரோஜினி நாயுடு, வி.பி.மேனன் மற்றும் லியாகத் அலிகான் ஆகியோர் சுதந்திர காலத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
மலிஷ்கா கூறியதாவது: இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவை சித்தரிப்பதில் நான் உண்மையிலேயே மிகுந்த பெருமை கொள்கிறேன். அவர்களைப் பற்றி நான் படித்தது மற்றும் எங்கள் இயக்குனருடன் நான் நடத்திய விவாதங்கள் மட்டுமே எனது ஒரே குறிப்பு என்பதால் அவர்களைப் பற்றி நடிப்பது ஒரு சவாலும் எனக்கு மிகுந்த மரியாதையும் ஆகும். அவர் எந்த வரம்புகளும் இல்லாத இந்தியாவின் நவீன பெண்களின் உண்மையான பிரதிநிதி என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர் மற்றும் ஒரு சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல் அரசியலில் பெண்களுக்கு ஒரு தடம் பதித்தவர்.
நமது தேசத்தின் வரலாற்றில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டத்தில் அவரது குணாதிசயத்தின் சிக்கல்களை ஆழமாகப் பார்ப்பதும், அவரது பயணத்தைப் புரிந்துகொள்வதும் அழகாக இருக்கிறது. இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருப்பது, காலப்போக்கில் பின்னோக்கிச் செல்வது மற்றும் வரலாற்றை அதன் மிக அசலான வடிவத்தில் அனுபவிப்பது போன்றது. என்று கூறினார்.




