மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்து அசத்தியவர் ராதிகா. தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களையும் தயாரித்து வருகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு காலில் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. காலில் கட்டுடன் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவரை மூத்த நடிகர் சிவகுமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதோடு, தான் வரைந்த ஓவியங்களையும் ராதிகாவிடம் சிவகுமார் வழங்கி உள்ளார்.
இந்த வீடியோவை ராதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ‛‛எனக்கு காலில் ஏற்பட்ட அடியால் அதிலிருந்து மீண்டு வருகிறேன். அண்ணன் சிவகுமார் என்னை வந்து பார்த்தது மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பல நிகழ்வுகளையும், அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்'' என தெரிவித்துள்ளார்.
தோழிகள் நலம் விசாரிப்பு
இதேப்போல் அவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் அவருடன் பீக்கில் இருந்த நாயகிகள் சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளனர். அந்த போட்டோக்களை பகிர்ந்து ராதிகா, ‛‛நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். 80ஸ் லவ், நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.