வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்து அசத்தியவர் ராதிகா. தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களையும் தயாரித்து வருகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு காலில் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. காலில் கட்டுடன் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவரை மூத்த நடிகர் சிவகுமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதோடு, தான் வரைந்த ஓவியங்களையும் ராதிகாவிடம் சிவகுமார் வழங்கி உள்ளார்.
இந்த வீடியோவை ராதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ‛‛எனக்கு காலில் ஏற்பட்ட அடியால் அதிலிருந்து மீண்டு வருகிறேன். அண்ணன் சிவகுமார் என்னை வந்து பார்த்தது மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பல நிகழ்வுகளையும், அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்'' என தெரிவித்துள்ளார்.
தோழிகள் நலம் விசாரிப்பு
இதேப்போல் அவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் அவருடன் பீக்கில் இருந்த நாயகிகள் சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளனர். அந்த போட்டோக்களை பகிர்ந்து ராதிகா, ‛‛நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். 80ஸ் லவ், நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.