கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், இன்று இரண்டு ஹீரோக்களின் தந்தை. அவரது சினிமா கேரியரில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்திருக்கிறார், என்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 1985ம் ஆண்டு தீபாவளிக்கு அவரது இரண்டு படங்கள் வெளிவந்தது. ஒன்று 'சிந்து பைரவி', மற்றொன்று 'பிரேம பாசம்'.
இதில் 'சிந்து பைரவி' பெரிய வெற்றி பெற்றதோடு அதில் நடித்த சுஹாசினிக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனால் அந்த படம் இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் இந்த படத்துடன் வந்த 'பிரேம பாசம்' பற்றிய எந்த தகவலும் பெரிதாக இல்லை. கே.விஜயன் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், ரேவதி நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். 'வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்' என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றது இந்த படத்தில்தான்.
இதே தீபாவளியன்று கரையைத் தொடாத அலைகள், படிக்காதவன், ஜப்பானில் கல்யாணராமன், சமயபுரத்தாளே சாட்சி, ஆஷா, சின்னவீடு, பெருமை” ஆகிய படங்கள் வெளிவந்தன.
சிவகுமார் நடித்த சிந்து பைரவி, பிரேம பாசம் படத்தின் ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படத்திலுமே அவரை விட பல வயது குறைந்த சுலக்ஷனா, சுஹாசினி, ரேவதி என்ற இளம் நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள்.