நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், இன்று இரண்டு ஹீரோக்களின் தந்தை. அவரது சினிமா கேரியரில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்திருக்கிறார், என்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 1985ம் ஆண்டு தீபாவளிக்கு அவரது இரண்டு படங்கள் வெளிவந்தது. ஒன்று 'சிந்து பைரவி', மற்றொன்று 'பிரேம பாசம்'.
இதில் 'சிந்து பைரவி' பெரிய வெற்றி பெற்றதோடு அதில் நடித்த சுஹாசினிக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனால் அந்த படம் இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் இந்த படத்துடன் வந்த 'பிரேம பாசம்' பற்றிய எந்த தகவலும் பெரிதாக இல்லை. கே.விஜயன் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், ரேவதி நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். 'வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்' என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றது இந்த படத்தில்தான்.
இதே தீபாவளியன்று கரையைத் தொடாத அலைகள், படிக்காதவன், ஜப்பானில் கல்யாணராமன், சமயபுரத்தாளே சாட்சி, ஆஷா, சின்னவீடு, பெருமை” ஆகிய படங்கள் வெளிவந்தன.
சிவகுமார் நடித்த சிந்து பைரவி, பிரேம பாசம் படத்தின் ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படத்திலுமே அவரை விட பல வயது குறைந்த சுலக்ஷனா, சுஹாசினி, ரேவதி என்ற இளம் நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள்.