தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
1980களில் நிறைய ஹிந்தி படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, ரஜினி அதிக ரீமேக் படங்களில் நடித்தனர். அரிதாக ஒரு சில தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அது பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கும். இப்படியான சூழலில் சிவகுமார் நடித்த 'உன்னை நான் சந்தித்தேன்' படம் ஹிந்தியில் ரீமேக் ஆனது.
கே.ரங்கராஜ் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா, சுரேஷ், ரேவதி, மோகன் நடித்தார்கள். இளையராஜா இசையமைத்தார். மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்தார்.
படத்தின் நாயகன் சிவகுமார் மனைவி சுஜாதா மீது அதிகமாக சந்தேகப்படுவார். இந்த சந்தேக புத்தியால் பாதிக்கப்படும் சுஜாதா வீட்டை விட்டு ஓடி விடுவார். 20 வருடங்களுக்கு பிறகு சிவகுமார் மனைவியை மீண்டும் சந்திக்கிறார். அப்போது அவருக்கு திருமணமாகி ரேவதி மகளாக இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் 'சிந்தூர்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. சிவகுமார் நடித்த கேரக்டரில் சசிகபூர் நடித்தார், சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். தெலுங்கில் 'சுமங்கலி' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.