பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த இளையராஜா அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா, இசையமைப்பாளராக அறிமுகமான ‛அன்னக்கிளி' படத்தின் நாயகனான பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்கச்சங்கிலியும் அணிவித்து கவுரவப்படுத்தினார். அவருடன் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா, மகளும், பாடகியுமான பிருந்தாவும் உடன் சென்று வாழ்த்தினர்.