'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த இளையராஜா அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா, இசையமைப்பாளராக அறிமுகமான ‛அன்னக்கிளி' படத்தின் நாயகனான பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்கச்சங்கிலியும் அணிவித்து கவுரவப்படுத்தினார். அவருடன் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா, மகளும், பாடகியுமான பிருந்தாவும் உடன் சென்று வாழ்த்தினர்.




