கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த இளையராஜா அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா, இசையமைப்பாளராக அறிமுகமான ‛அன்னக்கிளி' படத்தின் நாயகனான பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்கச்சங்கிலியும் அணிவித்து கவுரவப்படுத்தினார். அவருடன் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா, மகளும், பாடகியுமான பிருந்தாவும் உடன் சென்று வாழ்த்தினர்.