ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகர் சூர்யா தற்போது அவரின் 47வது படத்தின் படப்பிடிப்பை கடந்த வாரத்தில் பூஜை நிகழ்வுடன் துவங்கினார். இந்த படத்தை 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான புரொமோ சூட் எனப்படும் அறிமுக வீடியோவிற்கான படப்பிடிப்பு கேரளாவில் துவங்கியுள்ளது. இதில் சூர்யா போலீஸ் சீருடையில் கலந்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




