சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை |

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். மாரி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் இறப்பு குறித்து அந்த சீரியலின் ஹீரோயின் ஆஷிகா படுகோன் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சக நடிகரான சந்திரகாந்த், பவித்ராவின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீடியோவில், 'பவித்ரா கார் விபத்தினால் காயம் ஏற்பட்டு இறக்கவில்லை. கார் விபத்தில் என் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதைபார்த்த அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட பவித்ரா ஸ்டோக் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். பவித்ராவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பவித்ரா ஜெயராமும் சந்திரகாந்தும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா இறந்தது முதலே மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.