மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். மாரி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் இறப்பு குறித்து அந்த சீரியலின் ஹீரோயின் ஆஷிகா படுகோன் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சக நடிகரான சந்திரகாந்த், பவித்ராவின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீடியோவில், 'பவித்ரா கார் விபத்தினால் காயம் ஏற்பட்டு இறக்கவில்லை. கார் விபத்தில் என் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதைபார்த்த அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட பவித்ரா ஸ்டோக் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். பவித்ராவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பவித்ரா ஜெயராமும் சந்திரகாந்தும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா இறந்தது முதலே மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.