காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். மாரி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் இறப்பு குறித்து அந்த சீரியலின் ஹீரோயின் ஆஷிகா படுகோன் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சக நடிகரான சந்திரகாந்த், பவித்ராவின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீடியோவில், 'பவித்ரா கார் விபத்தினால் காயம் ஏற்பட்டு இறக்கவில்லை. கார் விபத்தில் என் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதைபார்த்த அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட பவித்ரா ஸ்டோக் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். பவித்ராவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பவித்ரா ஜெயராமும் சந்திரகாந்தும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா இறந்தது முதலே மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.