திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். மாரி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் இறப்பு குறித்து அந்த சீரியலின் ஹீரோயின் ஆஷிகா படுகோன் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சக நடிகரான சந்திரகாந்த், பவித்ராவின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீடியோவில், 'பவித்ரா கார் விபத்தினால் காயம் ஏற்பட்டு இறக்கவில்லை. கார் விபத்தில் என் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதைபார்த்த அதிர்ச்சியில் பெருமூச்சு விட்ட பவித்ரா ஸ்டோக் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். பவித்ராவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
பவித்ரா ஜெயராமும் சந்திரகாந்தும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா இறந்தது முதலே மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.