ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான மதுரை முத்துவின் அப்பா ஊர் நாட்டாமையாக இருந்தவராம். பிரிட்டிஷ்காரர் காலத்தில் முத்துவின் தாத்தாவும் அதன் பிறகு அவரது அப்பாவும் முன்சீப் என்று அழைக்கக் கூடிய ஊர் நாட்டாமை பதவி வகித்துள்ளார்கள். அவரது பேச்சை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 12 கிராமத்துகாரர்களும் தட்டமாட்டார்களாம். இப்படிபட்ட குடும்பத்திலிருந்து வந்த மதுரை முத்துவை, அவரது அப்பா வாத்தியராகவோ, வீஏஓ அதிகாரியாகவோ பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், முத்து காமெடியானாக மாறியது அவரது அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூத்தாடி ஆயிட்டியே என்று திட்டிக் கொண்டே இருப்பாராம்.
ஒருமுறை முத்துவின் தந்தை ஊர் பிரச்னைக்காக கலெக்டரிடம் சென்ற போது, கலெக்டர் என் அப்பாவிடம் 'நீங்க மதுரை முத்து அப்பாவா?' என்று கேட்டிருக்கிறார். என் நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் தான் என் அப்பாவுக்கு நானும் ஏதோ உருப்படியாக வாழ்கிறேன் என்று நம்பிக்கை வந்தது. எங்க அப்பா பெரிதாக சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் நன்றாக படிக்க வைத்தார். இப்போது நான் பெயர், புகழ், பணம் என்று இருக்கிறேன் என்று சொன்னால் அது என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று தனது தந்தை குறித்து மதுரை முத்து உருக்கமாக பேசியுள்ளார்.