2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு உதவியாக வரும் காஜா என்கிற கதாபாத்திரத்தில் பெரோஸ் நடித்திருந்தார். இதனால் அவர் காஜா என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து திருமுருகன் எடுத்த சீரியல்களில் நடித்து வந்த அவர் கொரோனாவுக்கு பிறகு எந்தவொரு சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், காஜா பெரோஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வறுமை நிலை குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நடிகர்களை பார்த்து அவர்களை போலவே செய்வேன். இதை பார்த்து சிலர் என்னை நடிக்க போகச் சொல்லி உசுப்பேற்றிவிட்டனர். அவ்வாறாக நாதஸ்வரம் ஆடிஷனுக்கு சென்றபோது தான் திருமுருகன் என்னை செலக்ட் செய்தது மட்டுமல்லாமல் சீரியல் முழுக்க கூடவே வரும் கதாபாத்திரமாக அதை மாற்றி அமைத்தார். அந்த தொடர் மூலம் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
திருமுருகன் அடுத்தடுத்து அவருடைய தொடர்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் சீரியல் எடுப்பதை நிறுத்தியுடன் எனக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வீட்டில் என்னை நம்பியும் சில ஜீவன்கள் இருப்பதால் பழையபடி செல்போன் கடைக்கே வேலைக்கு வந்துவிட்டேன். இப்போது திருமுருகன் தான் என்னை பார்த்து கொள்கிறார். மூன்று மாத வாடகை பாக்கியை அவர் தான் கொடுத்தார். அம்மாவிற்கு இருதய ஆப்ரேஷனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அவர் தான் கொடுத்து உதவினார்' என்று உருக்கமாக பேசியுள்ளார்.