'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு உதவியாக வரும் காஜா என்கிற கதாபாத்திரத்தில் பெரோஸ் நடித்திருந்தார். இதனால் அவர் காஜா என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து திருமுருகன் எடுத்த சீரியல்களில் நடித்து வந்த அவர் கொரோனாவுக்கு பிறகு எந்தவொரு சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், காஜா பெரோஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வறுமை நிலை குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நடிகர்களை பார்த்து அவர்களை போலவே செய்வேன். இதை பார்த்து சிலர் என்னை நடிக்க போகச் சொல்லி உசுப்பேற்றிவிட்டனர். அவ்வாறாக நாதஸ்வரம் ஆடிஷனுக்கு சென்றபோது தான் திருமுருகன் என்னை செலக்ட் செய்தது மட்டுமல்லாமல் சீரியல் முழுக்க கூடவே வரும் கதாபாத்திரமாக அதை மாற்றி அமைத்தார். அந்த தொடர் மூலம் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
திருமுருகன் அடுத்தடுத்து அவருடைய தொடர்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் சீரியல் எடுப்பதை நிறுத்தியுடன் எனக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வீட்டில் என்னை நம்பியும் சில ஜீவன்கள் இருப்பதால் பழையபடி செல்போன் கடைக்கே வேலைக்கு வந்துவிட்டேன். இப்போது திருமுருகன் தான் என்னை பார்த்து கொள்கிறார். மூன்று மாத வாடகை பாக்கியை அவர் தான் கொடுத்தார். அம்மாவிற்கு இருதய ஆப்ரேஷனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அவர் தான் கொடுத்து உதவினார்' என்று உருக்கமாக பேசியுள்ளார்.