தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஷால் கும்பார் இயக்கத்தில் நடிகை அஞ்சலி பாட்டீல், ஸ்ரீனிவாஸ் போக்லே மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மல்ஹர்'. ரிஷி சக்சேனா, முகமது சமத் மற்றும் அக்ஷதா ஆச்சார்யா ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபுல்லா பசாத் தயாரித்துள்ளார். டி.சதீஷ் மற்றும் சாரங் குல்கர்னி இசையமைத்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் நடக்கும் மூன்று கதைகளாக ஒவ்வொரு கதையுடனும் ஒரு தொடர்பு இருப்பது போன்று இந்த படம் உருவாகி உள்ளது. காதல் கலந்த குடும்ப படமாக தயாராகி உள்ளது. ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மே 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பிரபுல்லா பசாத் கூறுகையில், ‛‛மல்ஹர் படம் கட்ச் என்ற கிராம பகுதியில் நடக்கும் மூன்று கதைகளின் அற்புதமான சங்கமம் ஆகும். பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு கிடைக்கும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் இரண்டு சிறந்த நண்பர்களின் கதையைச் சொல்கிறது'' என்றார்.




