என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் தானே தயாரித்து, நடித்து முடித்துள்ள 'எமெர்ஜன்சி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்க போட இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
திரையுலகம் என்பது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக் கொண்டேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது நேரம் முழுவதையும் மக்களுக்காக செலவிடுவேன். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்றார்.
கங்கனாவும் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் கங்கனா மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.