காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் தானே தயாரித்து, நடித்து முடித்துள்ள 'எமெர்ஜன்சி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்க போட இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
திரையுலகம் என்பது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக் கொண்டேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது நேரம் முழுவதையும் மக்களுக்காக செலவிடுவேன். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்றார்.
கங்கனாவும் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் கங்கனா மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.