ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த கட்டுடனேயே விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த காஸ்டியூம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு மும்பை திருப்பி உள்ள ஐஸ்வர்யா ராய் இன்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்னும் சில தினங்களில் கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக பாலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த பிறகே அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.