சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த கட்டுடனேயே விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த காஸ்டியூம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு மும்பை திருப்பி உள்ள ஐஸ்வர்யா ராய் இன்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்னும் சில தினங்களில் கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக பாலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த பிறகே அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.