டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
கிரிக்கெட்டில் ஜ.பி.எல் போல கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணியின் போட்டி நடைபெற்றது. இந்த அணியை நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். அதனால் ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவும் மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்போது ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறியுள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் தனது கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் உடன் வந்திருந்த உறவினர் மீதும் கோபப்பட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.