எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

கிரிக்கெட்டில் ஜ.பி.எல் போல கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணியின் போட்டி நடைபெற்றது. இந்த அணியை நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். அதனால் ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவும் மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்போது ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறியுள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் தனது கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் உடன் வந்திருந்த உறவினர் மீதும் கோபப்பட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




