கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கிரிக்கெட்டில் ஜ.பி.எல் போல கபடி விளையாட்டில், புரோ கபடி லீக் நடத்தப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் என்ற அணியின் போட்டி நடைபெற்றது. இந்த அணியை நடிகர் அபிஷேக் பச்சன் தான் நிர்வகித்து வருகிறார். அதனால் ஜெய்பூர் அணியின் விளையாட்டை காண்பதற்காக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யாவும் மற்றும் அபிஷேக் பச்சனின் சகோதரி மகள் நவ்யாவும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்போது ஐஸ்வர்யா ராயின் காதுகளில் அபிஷேக் பச்சன் ஏதோ கூறியுள்ளார். அதன் பிறகு ஐஸ்வர்யா ராய் தனது கண்களை உருட்டி மிகுந்த கோபத்துடன் அபிஷேக் பச்சனை பார்க்கிறார். மேலும் உடன் வந்திருந்த உறவினர் மீதும் கோபப்பட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.