காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018ம் ஆண்டு நடந்த பேரணில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சமீபத்தில் கவுதம் நவ்காலாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் விமர்சித்தனர். காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து கருத்து பதிவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.