ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? |

லோக்சபா தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஓட்டளித்தார். கர்ப்பிணியான தீபிகா ஓட்டளிக்க வந்த போது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக தீபிகாவை ஒரு கையில் அணைத்தபடி அழைத்துச் சென்றார் ரன்வீர். யாரும் தன்னை தள்ளிவிட்டுவிடக் கூடாது என தனது கர்ப்ப வயிற்றில் கை வைத்தவாறே கவனத்துடன் சென்றார் தீபிகா.
தாய்மை பற்றி தீபிகா, ரன்வீர் அறிவித்த பின்பு தீபிகா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதனால், அவரது கர்ப்பம் குறித்து சில ஊடங்களில் சந்தேகத்தை எழுப்பினர். இந்நிலையில் தீபிகா கர்ப்ப வயிற்றுடன் வந்து ஓட்டளித்தது அந்த ஊடகங்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தது.
தீபிகாவுக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது.




