நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

லோக்சபா தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. பல பாலிவுட் பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே அவரது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஓட்டளித்தார். கர்ப்பிணியான தீபிகா ஓட்டளிக்க வந்த போது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக தீபிகாவை ஒரு கையில் அணைத்தபடி அழைத்துச் சென்றார் ரன்வீர். யாரும் தன்னை தள்ளிவிட்டுவிடக் கூடாது என தனது கர்ப்ப வயிற்றில் கை வைத்தவாறே கவனத்துடன் சென்றார் தீபிகா.
தாய்மை பற்றி தீபிகா, ரன்வீர் அறிவித்த பின்பு தீபிகா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அதனால், அவரது கர்ப்பம் குறித்து சில ஊடங்களில் சந்தேகத்தை எழுப்பினர். இந்நிலையில் தீபிகா கர்ப்ப வயிற்றுடன் வந்து ஓட்டளித்தது அந்த ஊடகங்களின் சந்தேகத்திற்கு பதிலளித்தது.
தீபிகாவுக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனத் தெரிகிறது.




