ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

தமிழ் சினிமாவில் சாண்டோ சின்னப்பா தேவருக்குபின், நடிகர் சிவகுமாருக்குபின், நடிகர் யோகிபாபு தீவிர முருகபக்தராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் கேரவனில் உள்ளும், புறமும் அவ்வளவு முருகன் ஓவியங்கள், அறுபடை வீடு முருகனும் அதில் இருக்கிறார். அவர் காரில், வீட்டில் ஏகப்பட்ட முருகன் போட்டோக்கள்.
எந்த ஊர் படப்பிடிப்பு என்றாலும் அருகில் இருக்கும் முருகன் கோயில்களுக்கு அவர் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல், எதிர்காலம் குறித்து கஷ்டப்பட்ட காலத்தில் திருத்தணி சென்று முருகனிடம் மனமுருக வேண்டுவாராம். அவர் ஆசையை முருகன் நிறைவேற்ற இப்போது முருகன் மீது அவருக்கு தனிபிரியம், பாசம், பக்தி. யோகிபாபு தனது மகனுக்கு விசாகன், மகளுக்கு பரணி கார்த்திகா என்று முருகன் திருநாமங்களை பெயராக வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது




