வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

56 வயதான அக்ஷய் குமார், பாலிவுட்டின் முன்னணி நடிகர். கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின், இந்தியாவின் முகமாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அக்ஷய்குமார் இப்போதுதான் முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்துள்ளார்.
அதற்கு காரணம் அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவராகத்தான் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளார். 'ஒர்க்கிங் பெர்மிட்' மூலம்தான் அவர் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய குடியுரிமையை கடந்த ஆண்டு அவர் பெற்றார். அதனை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நமது இந்தியா வளர்ச்சி அடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை மனதில் வைத்தே நான் ஓட்டளித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் சரியானவர் என்ற எண்ணம் வந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு சதவீதம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஓட்டு போட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என தெரிவித்தார்.