'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' |

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற கோஷம் பல ஆண்டுகளாகவே தெற்கில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ந்த மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்களை முதலிடத்தில் இருக்கிறது. அரசியலை போலவே சமீபகாலமாக திரைப்படங்களிலும் வடக்கு, தெற்கு பிரித்து பார்க்கப்படுகிறது. இதனை அக்ஷய்குமார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் நடித்துள்ள பிருத்விராஜ் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் இதுகுறித்து பேசியிருப்பதாவது: ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும். தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது பிரித்து சொன்னால், அதை வெறுக்கிறேன். அதோடு பான் இந்தியா படங்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. நாம் அனைவரும் ஒரே துறையில் தான் பணியாற்றுகிறோம் என்றே நம்புகிறேன். தெற்கு, வடக்கு என்கிற விவாதம் பெரிதாக மாறிவிட்டது. அது நிறுத்தப்பட வேண்டும். மொழியை பொறுத்தவரை அவரவர் தாய்மொழியில் தான் பேசி வருகிறோம். அது அழகாக இருக்கிறது. இதில் பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரித்துப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது. என்றார்.
இதே கருத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் கமல்ஹாசன் அங்குள்ள மீடியாக்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் அபாரத் திறமைகளை அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்று கூறியுள்ளார்.