நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து கன்னட நடிகர் சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை எங்கள் கட்சி பார்க்கிறது. மாநில மொழிகளை மதிக்கிறோம், வணங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன் அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.