மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் சச்சின். தற்போது அவர் சிவராஜ்குமாருடன இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் படம் இயக்குகிறார். கார்பரேட் கம்பெனிகளுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.
இதுகுறித்து சச்சின் கூறியிருப்பதாவது: சிவராஜ்குமாருடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவரை சந்தித்து கதையை சொன்னதும் உடனேயே ஒப்புக் கொண்டார். சிவ ராஜ்குமாரிடம் இருக்கும் திறமைகள் அனைத்தையும் வெளிக்கொண்டு வரும் படமாக இது இருக்கும் என்றார்.
இந்த படத்தில் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தமா கதாபாத்திரத்தை தழுவி சூப்பர் ஹீரோ பாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிவராஜ்குமார் தற்போது தனது 125வது படமான வேதா படத்திலும் யோகராஜ் பட் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.