இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் 'தக்லைப்'. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியது பின்னர் பெரும் சர்ச்சையானது. என்றாலும் அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் சிவராஜ்குமார்.
இந்த நிலையில் சிவராஜ்குமார் திரையுலகில் அடி எடுத்து வைத்து 40 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவரை கன்னடத்தில் வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் கமல்ஹாசன். அந்த வீடியோவில், ''சிவாண்ணாவுக்கு (சிவராஜ்குமார்) நான் சித்தப்பா மாதிரி. அவரது தந்தை ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பாராதது. சிவராஜ்குமாரை பொறுத்தவரை இந்த 40 ஆண்டுகள் எப்படி ஓடியதென்றே எனக்கு தெரியவில்லை. இன்றைக்கு அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். இனியும் சாதிக்கப் போகிறார். அவரது வளர்ச்சி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது'' என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.




