கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சென்னையில் வளர்ந்தவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். அவர் தந்தை ராஜ்குமார் அந்த காலத்தில் சென்னை கோடம்பாக்கத்தில்தான் வசித்து வந்தார். தனது கல்லுாரி படிப்பை சிவராஜ்குமார் சென்னையில் முடித்தார். ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் தனது நினைவுகளை அழகாக பகிர்ந்து கொள்வார். தான் நடித்த 45 பட நிகழ்ச்சிக்காக வந்தவர் சென்னை குறித்தும், தனது நண்பன் வின்சென்ட் அசோகன்(நடிகர் அசோகன் மகன்) குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், சென்னையில் என்னுடைய நண்பர்களின் முக்கியமானவன் வின்சென்ட். அவன் என்னை மரியாதையாக அழைக்க வேண்டாம். எப்போதும் போல என்னை அப்பாஜி என்ற செல்ல பெயரிலேயே அழைக்க வேண்டும் என்றார்.
வின்சென்ட் அசோகன் பேசுகையில், நானும், சிவராஜ்குமாரும் சென்னை தெருக்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நிறைய படம் பார்த்து இருக்கிறோம். என் அப்பா அசோகன் மறைந்தபோது அவர் பெரிய நடிகர் ஆகிவிட்டார். ஆனாலும் உடனே வந்தார். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் மறக்காமல் கலந்து கொள்கிறார் என்றார்.
அதேபோல் தனது மறைந்த தம்பியும் நடிகருமான புனித்ராஜ் குமார் குறித்து உருக்கமாக பேசிய சிவராஜ்குமார், 'அவர் 46வயதில் காலமாகிவிட்டான். அவர் சின்ன வயதில் ஹீரோ ஆனான், விருதுகள் வாங்கினான். புகழ் அடைந்தான் சின்ன வயதிலேயே போய்விட்டான். என் அப்பா, அம்மாவுடன் அவன்தான் அதிகம் இருப்பான். எல்லா படப்பிடிப்புக்கும் செல்வான். பிரைவேட் ஆகதான் படித்தான், பள்ளி, கல்லுாரி அதிகம் போகவில்லை. மறைந்த என் பெற்றோர், அவன் தங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவனையும் விரைவில் அழைத்துக் கொண்டார்கள் என நினைக்கிறேன்' என பேசினார்.




