கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். மலையாள ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்களிடமும் இவர் வரவேற்பை பெற்றுள்ளார். காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் கதாபாத்திரமும் படத்திற்கு படம் வித்தியாசமாக இருப்பது தான். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் முன்பு சூப்பர்மேன் கதை அம்சத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற படம் இவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
பஷில் ஜோசப் என்பவர் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இன்னொரு சூப்பர் மேனாக நடிகர் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஆனந்த் டிவி என்கிற மலையாள சேனல் 2021க்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் மின்னல் முரளி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார் டொவினோ தாமஸ்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மம்முட்டியிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக் கொண்டார் டொவினோ தாமஸ். இந்த நிகழ்வில் டொவினோ தாமஸ் குறித்து வெகுவாக பாராட்டி பேசினார் மம்முட்டி. இதனால் நிகழ்ந்துபோன டொவினோ, “வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. மம்முட்டியிடமிருந்து விருது, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை பெற்றது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.