கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ரொம்பவே குறைவான சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் ஒன்று நடிகர் மம்முட்டிக்கு தற்போது கிடைத்துள்ளது. மம்முட்டி சினிமாவில் நுழைவதற்கு முன்பு எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலைக்கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பிறகு அரசு கலைக்கல்லூரியில் சட்டம் படித்தார். இந்த நிலையில் தற்போது மகாராஜா கலை கல்லூரியில் மம்முட்டியின் திரையுலக வாழ்க்கை ஒரு பாடமாக பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டது.
நான்கு வருட பிஏ வரலாறு (ஹானர்ஸ்) படிப்பை படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கான 'ஹிஸ்டரி ஆப் மலையாளம் சினிமா' என்கிற புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மம்முட்டி மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முதன்முதல் பட்டம் வாங்கிய தாட்சாயினி வேலாயுதம் என்கிற பெண்ணின் வாழ்க்கையும் இதே வருடத்திற்கான இந்திய சமூக அரசியல் என்கிற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.