ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஏஆர் ரஹ்மான். அடிக்கடி இசை வேலைகளுக்காக அமெரிக்காவிற்குச் செல்வார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய, (கர்நாடக) இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்,” என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மான் இசையில் 'பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.




