ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் |
மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தவர், யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக ரொம்பவே தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராம் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ராமச்சந்திரா பாஸ் அன் கோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இது அவரது 42 வது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தாலும் கூட இதற்கு அடுத்ததாக நிவின்பாலியின் 44வது படத்தை இயக்க உள்ள இயக்குனரின் பெயர் தான் ரசிகர்களை அதைவிட ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்த படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான 'ஆர்யன் ரமணி கிரிஜா வல்லபன்' என்பவர்தான். கிட்டத்தட்ட கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் பட பாணியில் இருக்கிறது இவரது பெயர். இதற்கு முன்னதாக 'பர்ன் தி பேபி' என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.