பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது: சினிமா என்பது 100 சதவிகிதம் பொழுதுபோக்கும் விஷயம்தான். இப்போதல்லாம் சினிமாவில் யாரும் அட்வைஸ் பண்ணுவதை விரும்புவதில்லை. செல்போனில் அட்வைஸ் கொட்டுகிறது. அதை செய், இதை செய்யாதே என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதுதான் நமக்கு தெரியுமா இதை ஏன் சினிமாவில் சொல்கிறார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவில் தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது அதில் நான் உறுதியாக இருக்கிறேன். பொழுதுபோக்கை சினிமாவில் எவ்வளவு அழகாக சொல்ல வேண்டும், ஆழமாக சொல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வெறும் அறிவுரை மட்டும் சொன்னால், ஆடியன்ஸ் தியேட்டரை விட்டு வெளியே சென்று விடுவார்கள். நம்ம ஊர்ல பிரசாதம்கூட இனிப்பா இருந்தாதான் சாப்பிடுவாங்க.
சிவகார்த்திகேயன் எந்த பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இப்போது அவரை வைத்து நான் இயக்கி உள்ள 'மதராஸி' படம் 'கஜினி' மாதிரியான திரைக்கதையும், 'துப்பாக்கி' மாதிரியான ஆக்ஷனும் கொண்டதாக இருக்கும். முடிந்தவரை அதை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். என்றார்.