Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

05 பிப், 2023 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Actor-Baburaj-arrested-in-land-fraud-case

மலையாள திரையுலகில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் பாபுராஜ். சமீப காலமாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர், சில படங்களையும் இயக்கியுள்ளார். 90களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த வாணி விஸ்வநாத்தின் கணவர் இவர்தான். தமிழில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஷால் நடித்த வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் கூட வில்லனாக நடித்திருந்தார் பாபுராஜ். இந்த நிலையில் தற்போது மோசடி வழக்கு ஒன்றில் கேரள போலீசார் நடிகர் பாபுராஜை கைது செய்துள்ளனர்.

பாபுராஜுக்கு கேரளாவில் மூணாறு பகுதியில் சொந்தமாக சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இதை கடந்த 2020ல் அருண் என்பவர் 40 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து மாதம் 3 லட்சம் வாடகை என்கிற கணக்கில் காண்ட்ராக்ட் எடுத்தார். ஆனால் சில நாட்களிலேயே கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட பல மாதங்கள் இந்த ரிசார்ட் செயல்படாமல் இருந்தது. நிலைமை சரியானதும், ரிசார்ட்டை மீண்டும் செயல்படுத்த முயற்சித்தபோது தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சினைகள் அங்கே இருந்தன. அதை சரி செய்து தர பாபுராஜ் மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்ல அந்த ரிசார்ட் அமைந்திருந்த இடம் அந்தப்பகுதியில் உள்ள வேறு ஒரு அமைப்புக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் வருமான வரி துறையினர் அந்த நிலத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி இருந்தனர். இந்த விவரங்களை எல்லாம் பாபுராஜ் தன்னிடம் மறைத்து விட்டார் என்பதாலும் பிரச்னைகள் நிறைந்த இந்த ரிசார்ட்டை தொடர்ந்து நடத்த தான் விரும்பவில்லை என்றும் கூறி பாபுராஜிடம் தான் கொடுத்த முன்தொகை பணத்தை திரும்ப கேட்டுள்ளார் அருண்.

ஆனால் பாபுராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுக்கவே, அவர் மீது அடிமாலி காவல் நிலையத்தில் அருண் புகார் கொடுத்தார். அந்த சமயத்தில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் பாபுராஜ். அதன்பிறகு நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத பாபுராஜுக்கு பிப்ரவரி நான்காம் தேதி போலீசார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படி விசாரணைக்கு வந்தபோது பாபுராஜ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடிமாலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை ஆகியுள்ளார் பாபுராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு இயக்குனர் நரேஷ் வித்யாசாகர் ரெட்டி காலமானார்தெலுங்கு இயக்குனர் நரேஷ் ... மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in