ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

மலையாளத் திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் மணியம்பிள்ளை ராஜு. ஒரு தயாரிப்பாளராகவும் மாறி பல வருடங்களாக திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மோகன்லால், மம்முட்டி படங்களில் தவறாது இடம்பிடிப்பவர். சமீபத்தில் இரவு நேரத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு தெருவில் இருந்து மெயின் ரோடு சிக்னல் வழியாக இவரது கார் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக இரு சக்கர வாகனம் மோதி அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் நடிகர் மணியம் பிள்ளை ராஜு தனது காரை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான மணியம் பிள்ளை ராஜு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் மெயின் ரோட்டில் மிகவும் மிதவேகத்தில் தான் எனது காரை திருப்புவது சிசிடிவி காட்சிகளை நன்றாக பார்த்தால் தெரியும். இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த வாலிபர்கள் மீதுதான் தவறு என்றாலும் என் கார் மீது அவர்கள் மோதியதை நான் மறுக்கவில்லை. எனக்கு சிக்கன் குனியா காரணமாக உடல் நலம் சரியில்லாததால் அந்த இடத்தில் என்னால் காரை நிறுத்த முடியாமல் என் வீட்டிற்கு வந்து விட்டேன்.
ஆனாலும் போகும் வழியிலேயே போனிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு என் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்லி ஏற்பாடுகளை செய்து விட்டு தான் சென்றேன். போலீசாரிடம் மறுநாள் காலை விசாரணைக்கு வருவதாக சொன்னபடி தற்போது நேரில் காவல் நிலையம் வந்தேன்” என்று கூறியுள்ளார்.