'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
முதன்முதலாக இந்தியாவிலேயே தயாராகியுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ‛ஐஏசி விக்ராந்த்' கொச்சியில் நடைபெற்று வந்த இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை நேற்று பார்வையிட்டார். அவருக்கு கடற்படை அதிகாரிகள் மிக சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோகன்லாலுடன் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியும் பிரபல திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மோகன்லாலை பொறுத்தவரை ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சில ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினன்ட் கலோனல் (துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் தற்போது இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும் பார்வையிட்டுள்ளார் மோகன்லால்.