இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் அகாண்டா. இந்த படத்தில் கஜேந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நிதின் மேத்தா. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது பலருக்கும் தெரிந்திராத விஷயம். இந்திய ராணுவத்தில் இருபத்தொரு வருடங்கள் பணியாற்றி லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து 2016ல் ஓய்வு பெற்ற நிதின் மேத்தா அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்படவே அதற்காக தாடி வளர்க்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் ஏதேச்சையாக விமான நிலையத்தில் இவரை சந்தித்த ஒரு இயக்குனர் தாடியுடன் இருந்த இவரது தோற்றத்தைப் பார்த்து தான் இயக்கிய விளம்பர படத்தில் இவரை நடிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து பேஷன் ஷோக்கள், டிவி விளம்பரங்கள் என ஓரளவு வாய்ப்புகள் நிதின் மேத்தாவை தேடி வர ஓரளவு பிரபலமாக ஆரம்பித்தார். அந்த சமயத்தில்தான் பாலகிருஷ்ணாவுடன் அகாண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் மூலம் இவர் மீது வெளிச்சம் விழ தற்போது சில படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தள்ளது. அந்த வகையில் விரைவில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி ஆகியோரிடம் அடி வாங்குவதற்காக காத்திருக்கிறேன் என்று பிரபல ஹீரோக்களின் படங்களில் வில்லானாக நடிக்க விரும்பும் தனது ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார் நிதின் மேத்தா