2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
கடந்த 30 வருடங்களாக மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார்.. தமிழில் அஜித் நடித்த ஜனா, விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த ஷாஜி கைலாஷ் 2013 வெளியான ஜிஞ்சர் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இந்தநிலையில் இவரது இயக்கத்தில் தற்போது கடுவா என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விவேக் ஓபராய் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று மலையாளத்தில் வெளியான இந்தப்படம் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
பிரித்விராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியது போன்று நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இது வெளியாகி உள்ளது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல இயக்குனர் ஷாஜி கைலாஷ் மீண்டும் தனது பார்முக்கு திரும்பிவிட்டார் என்றும் அவரை பாராட்டி வருகிறார்கள்.. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாஜி கைலாஷ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.