
10 வருடங்களுக்கு பிறகு கடுவா மூலம் பார்முக்கு திரும்பிய ஷாஜி கைலாஷ்
இந்தநிலையில் இவரது இயக்கத்தில் தற்போது கடுவா என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விவேக் ஓபராய் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று மலையாளத்தில் வெளியான இந்தப்படம் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
பிரித்விராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியது போன்று நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இது வெளியாகி உள்ளது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல இயக்குனர் ஷாஜி கைலாஷ் மீண்டும் தனது பார்முக்கு திரும்பிவிட்டார் என்றும் அவரை பாராட்டி வருகிறார்கள்.. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாஜி கைலாஷ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!