ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
கடந்த 30 வருடங்களாக மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனராக வலம் வருபவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார்.. தமிழில் அஜித் நடித்த ஜனா, விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த ஷாஜி கைலாஷ் 2013 வெளியான ஜிஞ்சர் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இந்தநிலையில் இவரது இயக்கத்தில் தற்போது கடுவா என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் விவேக் ஓபராய் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று மலையாளத்தில் வெளியான இந்தப்படம் முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
பிரித்விராஜ் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியது போன்று நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள சினிமாவில் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக இது வெளியாகி உள்ளது என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்ல இயக்குனர் ஷாஜி கைலாஷ் மீண்டும் தனது பார்முக்கு திரும்பிவிட்டார் என்றும் அவரை பாராட்டி வருகிறார்கள்.. படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாஜி கைலாஷ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.