'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக 'தேவரா' என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.
இந்நிலையில் ஜான்வி கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''தென் மாநிலங்களுடனான தனது உணர்ச்சிபூர்வமான பிணைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் கலாசாரத்துடன் நான் மிகவும் இணைந்திருப்பதாக உணர்கிறேன். காரணம் இது எனக்கு மிகவும் பரிட்சயமானது. எனது அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியாகும். மேலும் தமிழில் ஓரளவு பேச தெரியும் என்றாலும் தற்போது தெலுங்கு பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.