நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா கதையின் நாயகியாக நடித்து கடந்தவாரம் வெளியான படம் ‛தாய் கிழவி'. ரேச்சல், சிங்கம்புலி, இளவரசு, பாலசரவணன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதுரை கதைக்கள பின்னணியில் பக்கா கிராமத்து படமாக குறிப்பாக பெண்களுக்கு ஒரு முக்கிய சமூக செய்தி சொல்லும் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.22 கோடி வசூலித்துள்ளது. விரைவில் 50 கோடி வசூலை கூட கடக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக சிங்கம் புலி நடித்துள்ளார். இப்பட விழாவிலேயே நான் கமலை இதுவரை நேரில் பார்த்தது கிடையாது என கூறியிருந்தார் சிங்கம் புலி. இந்நிலையில் அரசியல், தேர்தல் பணிகளுக்கு இடையே சிங்கம் புலியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் கமல். தனது ரசிகராக சிறப்பாக நடித்து இருப்பதாக அவரை கமல் பாராட்டி உள்ளார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்ததாம். படம் பற்றியும், தனது கேரக்டர் பற்றியும் கமல் குறிப்பிட்டு பேசியதாலும், பாராட்டியதாலும் மகிழ்ச்சியில் உள்ளார் சிங்கம் புலி.