வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிப்புலக மேதை என அனைவராலும் போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், 1952ம் ஆண்டு “பராசக்தி” திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து ஏராளமான சமூகம் மற்றும் ராஜா ராணி கதைகளில் நடித்து, ஒரு முன்னணி நாயகனாக தமிழ் திரையுலகையே தன்பால் ஈர்த்த ஒரு தனிப்பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்த நிலையில், அவர் நடித்து வெளிவந்த முதல் புராண இதிகாச திரைப்படமாக வந்த திரைப்படம்தான் “சம்பூர்ண ராமாயணம்”.
“எம் ஏ வி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், தயாரிப்பாளர் எம் ஏ வேணு தயாரித்து, இயக்குநர் கே சோமு இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகனாக, ஸ்ரீராமராக நடித்திருந்தவர் அன்றைய தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான என் டி ராமாராவ். சீதையாக நடித்திருந்தவர் 'நாட்டியப் பேரொளி' பத்மினி. வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் 'பரதன்'.
முதலில் இந்த 'பரதன்' கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட இருந்தவர் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். புராண இதிகாச திரைப்படங்களில் நடிப்பது தனது கொள்கைக்கு முரணான ஒன்று என்ற தீவிர பற்றாளராக அவர் இருந்ததால், அந்த வாய்ப்பு நடிகர் திலம் சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் தனது அபார நடிப்பை வழங்கி, படம் பார்ப்போர் அனைவரின் கவனங்களையும் ஈர்த்திருப்பார் சிவாஜிகணேசன். படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி, படத்தைப் பாராட்டிப் பேசியதோடு, குறிப்பாக “பரதனைக் கண்டேன்” என நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பை சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.
'இறையருட் செல்வர்' ஏ பி நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத, 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும், வசனங்களும் படத்தின் மகத்தான வெற்றிக்கு துணை நின்றன. 1958ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று, வெள்ளிவிழா கண்டது மட்டுமின்றி, தமிழ் சினிமாவில் புராண படங்களின் வருகை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்த திரைப்படம்தான் இந்த “சம்பூர்ண ராமாயணம்” திரைப்படம்.




