இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து வரும் சில அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக சில மாதங்களுக்கு முன் திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் நீண்டநாள் போராடி முன் ஜாமின் பெற்றார் திலீப்.
அதுமட்டுமல்ல, தன்மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் திலீப். இந்தநிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது சிபிஐ வசம் மாற்றவோ வாய்ப்பில்லை என கூறி திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் திலீப் இந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டி, சபரிமலை சென்று வழிபட்டு வந்த நிலையில், அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.