“என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து வரும் சில அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக சில மாதங்களுக்கு முன் திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் நீண்டநாள் போராடி முன் ஜாமின் பெற்றார் திலீப்.
அதுமட்டுமல்ல, தன்மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் திலீப். இந்தநிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது சிபிஐ வசம் மாற்றவோ வாய்ப்பில்லை என கூறி திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் திலீப் இந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டி, சபரிமலை சென்று வழிபட்டு வந்த நிலையில், அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.