உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொச்சியில் இவர் வசிக்கும் பனம்பள்ளி நகரில் உள்ள வீட்டில் இருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கிடைத்த தகவல்கள், சிசி டிவியில் பதிவான கார் விபரங்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பீகாரைச் சேர்ந்த முகமது இர்பான் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் அவர் கொள்ளையடித்த நகைகளுடன் பீகாரை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் உடுப்பியில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு நகைகள் மற்றும் காருடன் கேரள போலீஸ் சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த திருட்டில் இவர் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது உள்ளூரில் இவருக்கு யாராவது உதவியாக செயல்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.