இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க சென்ற கேரள இளைஞன் பட்ட துன்பங்களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
கலகலப்பான பிரேமலு, விறுவிறுப்பான மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் போல அல்லாமல் இந்த படம் கொஞ்சம் சீரியஸான கதை அம்சத்துடன் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் அதே போன்ற வரவேற்பை முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகின்றனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 150 கோடி இந்தப் படம் வசூலித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பிரித்விராஜ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.