உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது நடிகையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஆனது குறித்து சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். எனக்கு நடிப்பு புதுசு. என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், நான் நடிப்பதற்கு தயங்கினேன். மகள் வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.