10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் லிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்யும் தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மற்றவர்கள் என்னை பற்றி விமர்சிப்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பெண்கள் எப்போதுமே மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். இதை செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.