சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் லிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்யும் தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மற்றவர்கள் என்னை பற்றி விமர்சிப்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பெண்கள் எப்போதுமே மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். இதை செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.