திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

நூற்றுக்கணக்கான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும், இயக்குனருமான சூரிய கிரண், 48 உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். குறிப்பாக ‛மௌன கீதங்கள், கல்லுக்குள் ஈரம், கடல் மீன்கள், படிக்காதவன்' ஆகியவை தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்கள் ஆகும்.
பின்னர் தனது பெயரை சூரிய கிரண் என மாற்றி தெலுங்கில் சத்யம், பிரமாஸ்திரம் போன்ற படங்களை இயக்கினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தமிழில் வரலட்சுமி நடிப்பில் 'அரசி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்னும் இந்தப்படம் திரைக்கு வரவில்லை.
இவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(மார்ச் 11) காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. இவர் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார் சூரிய கிரண்.
நடிகை காவேரியை திருமணம் செய்த சூரிய கிரண் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.




