நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை |
அரண்மனை நான்காம் பாகம் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது'ஒடேலா 2' தொடரில் நடிக்கிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெற்றிக்குப் பிறகு நடிக்கும் தொடர் இது. அந்த சீரிஸில் கதைக்காக தனது காதலர் விஜய் வர்மாவுடன் இவர் காட்டிய தாராள நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இதனால், பல வெப் சீரிஸ்கள் வாய்ப்பு தமன்னாவுக்கு வருகிறது.
கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் தொடர்ச்சி 'ஒடேலா 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் தான் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று வாராணசியில் தொடங்கியது. இந்தத் தொடர் கிராமிய பின்னணியில் உருவாகிறது. ஹிந்தியில் தயாரானாலும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது.