இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
'புஷ்பா' படம் மூலம் ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த நடிகையான ராஷ்மிகாவை அங்குள்ள அவரது ரசிகர்கள் வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அவரை சந்தித்த புகைப்படங்களையும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். அவர்களது அன்பிற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
இந்திய நடிகைகளில் ஒரு சிலருக்குத்தான் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தனக்கும் அங்கு ரசிகர்கள் இருப்பது குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.